ஓம் சிவாய நம...
என்றும்போலவே இன்றும் இயல்பாகவே விடிந்தது பொழுது, என்றென்றும் என்னை இயக்கும் எனது அருளாளன் எம்பெருமான் சிவபெருமான் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் மண்ணுக்குள்ளே இருந்தாரோ யாம் அறியேன், ஐப்பசி மழைபொழுதில் பொங்கி வெளிவந்திருக்கிறார் இன்று.
எனது வீட்டுக்கு பின்பகுதியில் (வீட்டை ஒட்டியே) வெறும் கல்லால் ஆன ஒரு சிவலிங்கம் அத்தனை பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடந்தது பல ஆண்டுகளாக,
சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த புதர்களை சீர் செய்து இளைஞர்கள் சிலர்கூடி ஒரு கீற்று கொட்டகை அமைத்து பராமரித்து வந்தனர், காலப்போக்கில் கீற்றுக்கொட்டகையை தவிர்த்துவிட்டு ஒரு கட்டுமானம் செய்ய எண்ணி சிறுபள்ளங்கள் தோண்டியபொழுது கல்லால் ஆன சில சிலைகள் கிடைத்தது, போதிய பொருளாதாரமில்லாமல் அந்தபணியும் அத்தோடு நிறுத்தப்பட்டது,
மிக சமீபத்தில் அருள்மிகு பழமழைநாத சுவாமிகள் என்று அறியப்பட்ட இந்த சிவலிங்கத்தை மையப்படுத்தி ஒரு ஆலயம் எடுப்பிக்க கிராமத்தவர்கள் முடிவு செய்து சில லட்சங்களை மிகுந்த சிரமத்தோடு திரட்டி கோவில் கட்டுமானப்பணிகள் இனிதென தொடங்கி நடந்துவருகிறது கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கும் இந்த தருணத்தில்
இன்று கட்டுமானத்திற்காக பள்ளம் தோண்டும்பொழுது கொத்துகொத்தாக ஐம்பொன் சிலைகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது, இன்னும் பல சிலைகள் இருப்பதையும் காண முடிகிறது அரசு உயரதிகாரிகளின் வருகைக்காக சிலைகளை மண்ணிலிருந்து எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை வெளிவந்ததில் நடராஜர், விநாயகர், இன்னும் பல சிலைகள் இருக்கின்றது.
இந்த சிலைகள் எத்தனை நூற்றாண்டுகள் மண்ணில் மறைந்திருந்தது என்பதை அறியும்பொழுதுதான் இந்த சிவாலயத்தின் பாரம்பரியம் உலகறியும், எங்கள் கிராமமே ஆச்சர்யத்தில் மூழ்கி கிடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்திருக்கிறது எங்கள் பாரம்பரியமான பழஞ்சூர் கிராமம்
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்.
என்றும்போலவே இன்றும் இயல்பாகவே விடிந்தது பொழுது, என்றென்றும் என்னை இயக்கும் எனது அருளாளன் எம்பெருமான் சிவபெருமான் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் மண்ணுக்குள்ளே இருந்தாரோ யாம் அறியேன், ஐப்பசி மழைபொழுதில் பொங்கி வெளிவந்திருக்கிறார் இன்று.
எனது வீட்டுக்கு பின்பகுதியில் (வீட்டை ஒட்டியே) வெறும் கல்லால் ஆன ஒரு சிவலிங்கம் அத்தனை பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடந்தது பல ஆண்டுகளாக,
சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த புதர்களை சீர் செய்து இளைஞர்கள் சிலர்கூடி ஒரு கீற்று கொட்டகை அமைத்து பராமரித்து வந்தனர், காலப்போக்கில் கீற்றுக்கொட்டகையை தவிர்த்துவிட்டு ஒரு கட்டுமானம் செய்ய எண்ணி சிறுபள்ளங்கள் தோண்டியபொழுது கல்லால் ஆன சில சிலைகள் கிடைத்தது, போதிய பொருளாதாரமில்லாமல் அந்தபணியும் அத்தோடு நிறுத்தப்பட்டது,
மிக சமீபத்தில் அருள்மிகு பழமழைநாத சுவாமிகள் என்று அறியப்பட்ட இந்த சிவலிங்கத்தை மையப்படுத்தி ஒரு ஆலயம் எடுப்பிக்க கிராமத்தவர்கள் முடிவு செய்து சில லட்சங்களை மிகுந்த சிரமத்தோடு திரட்டி கோவில் கட்டுமானப்பணிகள் இனிதென தொடங்கி நடந்துவருகிறது கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கும் இந்த தருணத்தில்
இன்று கட்டுமானத்திற்காக பள்ளம் தோண்டும்பொழுது கொத்துகொத்தாக ஐம்பொன் சிலைகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது, இன்னும் பல சிலைகள் இருப்பதையும் காண முடிகிறது அரசு உயரதிகாரிகளின் வருகைக்காக சிலைகளை மண்ணிலிருந்து எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை வெளிவந்ததில் நடராஜர், விநாயகர், இன்னும் பல சிலைகள் இருக்கின்றது.
இந்த சிலைகள் எத்தனை நூற்றாண்டுகள் மண்ணில் மறைந்திருந்தது என்பதை அறியும்பொழுதுதான் இந்த சிவாலயத்தின் பாரம்பரியம் உலகறியும், எங்கள் கிராமமே ஆச்சர்யத்தில் மூழ்கி கிடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்திருக்கிறது எங்கள் பாரம்பரியமான பழஞ்சூர் கிராமம்
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்.











































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக